Monday, February 22, 2010

என்று தணியும் இவள் தாகம்

அங்கும் இங்குமாய் ஓரிரு முள்வார்த்தைகள் வீசினாய்
இன்று முள்வேலியிட்டு புண்படுத்துகிறாய்,
என்ன கிட்டுகிறது உனக்கு
எதை ஈட்டித்தந்தாய் எனக்கு,
இப்படி கேள்விகள் பல எழுகின்றன
பதில்கள் தழுவுகிறது எனது இதயம்,
என்று இதற்கு உதயம்.
அதுவரை பேனா முட்களையும் செல்போனையும் வடிகாலாய் கொண்டு
நிர ப்புகிறேன் நம் வாழ்க்கை புத்தகத்தின் தாள்களை.

மின்னல் சிரிப்பு கண்டு- இன்ப
மழை வரும் என்று - இல்லம்
புகுந்தேன்: இடி வார்த்தைகள்
தொடர- வாராமல் போனது
மழை: இடி அடங்க அர்ஜுனன்
முழக்கம்- வார்த்தை ஓய நான்
என்ன முழங்க : சொல்லிவிடு - வந்து
விடட்டும் இன்ப மழை

கவிதை விதைத்துவிட்டு-
காத்திருந்தால் போதுமோ.
வாழ்க்கை(பயிரிட) மகசூல் பெருகிடுமோ?
காதல் நீர் பாய்ச்சி
பிள்ளைகள் களை எடுத்து
விட்டுகொடுதலை, அனுசரணை
உரமிட்டு/ உரமாக்கி -
வாழ்க்கை விளை நிலத்தில் ஏதோ முன்
வேர்கள் இன்றி பயிரிட்டு - கவிதை
சூத்திரமோ தங்கு தடை இன்றி
விடை பெற்றிட: பிள்ளையார்சுழி
மட்டும் போட பரீட்சைத் தாள்
அல்ல - வாழ்க்கைத் தாள்.

கவிதை என்றாய்- கதையாகி விட்டாய்

கவிதை தொடக்கம்: காதல் பயணம்- கதை சுருக்கம்

காதலர்களின் பிள்ளையார்சுழி?-
பல்லாயிரம் கவிஞர்கள்
உருவாகிய அச்சு? - I Love You.

These lines are specially dedicated to me by my lovable wife,Priyaa M

No comments:

Post a Comment